Monday, January 7, 2008

படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்த
வரிகள் : கண்ணதாசன்
குரல் : சௌந்தரராஜன்

போனால் போகட்டும் போடா -
இந்தபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

போனால்......)

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில்ஜனனம் என்பது வரவாகும்
வரும்மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

(போனால்..)

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது
இதுகோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக்கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது போனால் போகட்டும் போடா...

(போனால்.)

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன்நாலும் தெரிந்த தலைவனடா
தினம்நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்.)

No comments: